பிரதமர் தமிழகம் வருகை.. டிஜிபி ஆலோசனை!
- makkal viruppam
- Apr 3, 2023
- 1 min read

மோடியின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக டிஜிபி ஆலோசனை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை விமான நிலைய புதிய முனையக் கட்டிடம், சென்னை-கோவை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை உள்ளிட்டவற்றை திறந்துவைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற ஏப்ரல் 8-ம் தேதி பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகை புரிகிறார். இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக டிஜிபி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இதில், சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட பல அதிகரிகள் கலந்து கொண்டனர்.










Comments