இந்திய நாடார்கள் பேரமைப்பு சார்பில் மார்சல் நேசமணி நாடார் அவர்களின் நினைவு நாள் மலரஞ்சலி நிகழ்ச்சி.
இந்திய நாடார்கள் பேரமைப்பு சார்பில் மார்சல் நேசமணி நாடார் அவர்களின் நினைவு நாள் மலரஞ்சலி நிகழ்ச்சி.

01.06.2023 வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் சென்னை வில்லிவாக்கதில் உள்ள இந்திய நாடார்கள் பேராமைப்பின் தலைமை அலுவலகத்தில் சுதந்திர போராட்ட வீரரும் குமரியை தமிழகத்துடன் இணைக்க போராடி வெற்றி பெற்ற மார்சல். A.நேசமணி நாடார் அவர்களின் 55 வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு தலைவர் ராகம் சௌந்தர பாண்டியன் அவர்களின் ஆலோசனைக்கிணங்க மாநில பொதுச் செயலாளர் கே.எஸ்.மலர்மன்னன் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் இந்திய நாடார்கள் பேரமைப்பின் ஆலோசகர் எஸ். டி.பன்னீர்செல்வம் அவர்களும், பேரமைப்பின் வட சென்னை கிழக்கு மாவட்ட பொருளாளர் டி.ஆர்.பி.குமரன், மாவட்ட தகவல் தொழிர் நுட்ப பிரிவு பொருளாளர் ரவிராஜன் தகவல் தொழிற் நுட்ப பிரிவு துணை தலைவர் செந்தில் இளைஞர் அணி பொருளாளர் தியாக வேல், உள்ளிட்ட பல நிர்வாகிகளும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.










Comments