top of page
செய்திகள்


செய்தியாளர் கயல்விழி யின், மகன் கே.வி.ராஜாவின் முதலாம் ஆண்டு நினைவு நாளில், அவரின் சிலையை திறந்து வைத்தார் நீதியரசர் துரை கருணாகரன் அவர்கள்.
2025 ஆம் வருடம், நாளைய தீர்ப்பு இதழின் செய்தியாளர் கயல்விழி அவர்களின், மகன் கே.வி.ராஜா (எ) ஆரோக்கிய ராஜா அவர்கள், அவர் படித்த கல்லூரியில் நடந்த ஒரு சில பிரச்சனைகளால், தற்கொலை செய்து கொண்டார். அவரின் முதலாம் ஆண்டு நினைவு நாள் 09.06.2026 அன்று, கயல்விழி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது, இந்நிகழ்வில் விக்டோரியா செஷலில் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி திரு.துரை கருணாகரன் அவர்கள், கலந்து கொண்டு கே.வி.ராஜா அவர்களின் சிலையை திறந்து வைத்தார், மேலும் இந்நிகழ்வில், தலைமை செயலக
Jun 121 min read


பணியில் திறமையில்லை… நாடகத்தில் திறமை அதிகம்..! “நாடகக் கலைஞர்கள், ஆசிரியர்கள் மீது கடும் குற்றச்சாட்டு..! உடனடியாக மாவட்ட ஆட்சியர் தலையிட்டு நடவடிக்கை எடுப்பாரா..?
இராணிப்பேட்டை மாவட்ட கல்வித்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவமாக, நேர்மையாகவும், திறம்படவும் செயல்பட்டு வரும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மோகனா அவர்களுக்கு எதிராக சில செயல்படாத ஆசிரியர்கள் திட்டமிட்டு கபட நாடகத்தில் ஈடுபட்டுள்ளதாக கல்வித்துறை வட்டாரங்களில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற ஒரே நோக்கில் தொடர்ந்து ஆய்வு கூட்டங்கள், கண்காணிப்புகள், ஆலோசனைகள் மற்றும் செயல்திறன் மதிப்பீடுகளை தீவிரப்படுத்தி வரும் மாவட்ட
May 251 min read


சிறு பத்திரிகையாளர்களுக்கு, திமுக, செய்த துரோகத்தை சரி செய்யுங்கள், முதல்வர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களே.
சிறு பத்திரிகைகளுக்கு சலுகைகள் வழங்குங்கள், முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள், பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன், அவர்களின் புதிய பணி சிறக்க வாழ்த்துக்கள், பெரும்பான்மையான மக்களின் வாக்குகளைப் பெற்று தமிழ்நாட்டின் முதல்வராக அமர்ந்திருக்கும் ச.ஜோசப் விஜய் அவர்களுக்கும், அவர்களுடைய அரசில் பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்களுக்கும், ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நலச் சங்கத்
May 181 min read


ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் புதிய பரபரப்பு!
சென்னையின் பெரம்பூர் பகுதியில் கடந்த 05.07.2024 அன்று பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம கும்பலால் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக K-1 செம்பியம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, பின்னர் சிறப்பு விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியான சோதனைகள், கைது நடவடிக்கைகள், சிசிடிவி ஆதாரங்கள், செல்போன் தொடர்பு பதிவுகள்
May 172 min read


செய்தி மக்கள் தொடர்புத் துறை, இயக்குநராக, மருத்துவர்.அ.அருண் தம்புராஜ் இ.ஆ.ப. பொறுப்பேற்றார்.
சென்னை, தலைமைச் செயலகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநராக மருத்துவர் அ.அருண் தம்புராஜ், இ.ஆ.ப., அவர்கள், 16.05.2026 அன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
May 171 min read


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாள் விழா.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாள் விழா. மாசி - 21. மார்ச் - 05. நேரம் - 11.30 இரவு. தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 78 வது பிறந்தநாளை முன்னிட்டு அரிமா சு.சேகர் DCE, தென் சென்னை தெற்கு (கி)மாவட்டம் அவர்களின் தலைமையில், வேளச்சேரி 175 வது வட்டம் பவானி நகரில் உள்ள 1078 நபர்களுக்கு ஏற்பாடு செய்த நலத்திட்ட உதவிகளை, M.K.அசோக் EX MLA, மாவட்ட செயலாளர் - தென்சென்னை தெற்கு (கி)மாவட்டம் அவர்கள், மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். மே
Mar 51 min read


தாயாரின் நினைவு நாளில் பொதுமக்களுக்கு உணவு வழங்கிய மகன்.
தாயாரின் நினைவு நாளில் பொதுமக்களுக்கு உணவு வழங்கிய மகன். மாசி - 17. மார்ச் - 01. நேரம் - 01.15 அதிகாலை. சென்னை, விஜயராகவாபுரம் வியாபாரிகள் சங்க நிர்வாகி, தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை உறுப்பினர், ஆஷா ஜுவல்லரி உரிமையாளர் C. நவீன் அவர்களின் தாயார் C.கஜராதேவி அவர்களின், 10 ஆம் ஆண்டு நினைவு நாளில், விஜயராகவாபுரத்தில் பொதுமக்கள் 500 பேருக்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கி சிறப்பித்தார், இந்நிகழ்வில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளர் மு.அருண
Mar 11 min read


தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள், நலத்திட்ட உதவிகள் வழங்கிய, மாவட்ட செயலாளர் M.K.அசோக் Ex MLA.
மாசி - 13. பிப்ரவரி - 25. நேரம் - 05.15 மாலை. தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள், நலத்திட்ட உதவிகள் வழங்கிய, மாவட்ட செயலாளர் M.K.அசோக் Ex MLA. தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஆணைக்கிணங்க, மக்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தரமணி, தந்தை பெரியார் நகர், கோதாவரி தெருவில், 24.02.2026 அன்று 178-வது தெற்கு வட்டச
Feb 251 min read


புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் நடித்த ரகசிய போலீஸ் 115 திரைப்படம் வெளியீடு, பார்த்து மகிழுங்கள் எம்ஜிஆர் மக்கள் கட்சி விஸ்வநாதன் அழைப்பு.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் நடித்த ரகசிய போலீஸ் 115 திரைப்படம் வெளியீடு, பார்த்து மகிழுங்கள் எம்ஜிஆர் மக்கள் கட்சி விஸ்வநாதன் அழைப்பு. மாசி - 07. பிப்ரவரி - 19. நேரம் - 09.30 இரவு. சென்னை, ரெட்ஹில்ஸ் காரனோடையில் உள்ள ஸ்ரீகோபாலகிருஷ்ணன் திரையரங்கில், 20.02.2026-நாளை முதல் புரட்சித் தலைவர் "எம்.ஜி.ஆர்" அவர்கள் நடித்த "ரகசிய போலீஸ் 115" திரைப்படம் திரையிடப்படுகிறது. எம்ஜிஆர் அவர்களின் ரசிகர் பெருமக்கள் கண்டு களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். தொடர்புக்கு 9551226212. "எம
Feb 191 min read


அனைத்துலக வள்ளலார் மாநாடு
அனைத்துலக வள்ளலார் மாநாடு மாசி - 04. பிப்ரவரி - 18. நேரம் - 09.45 இரவு. தமிழ்நாடு அரசின், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அனைத்துலக வள்ளலார் மாநாடு, சென்னையில் பிப்ரவரி 15, 2026 அன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தொடங்கி வைத்து சன்மார்க்கிகளுக்கு விருதுகள் வழங்கி விழாப் பேருரை ஆற்றினார், இந்து சமய அறநிலைத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு அவர்கள், அமைச்சர் ஏ.வ.வேலு அவர்கள், சண்முகம் மூர்த்தி லட்சுமணன், நிறுவனர் சித்த வேதம் மல்டி வேர் சிட்டி, மற்றும் நிர்வாகிகள் க
Feb 181 min read


சிறந்த வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற, செய்தியாளர் டி.டென்னிசன்.
சிறந்த வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற, செய்தியாளர் டி.டென்னிசன். சென்னை, ஆலந்தூரில் நடைபெற்ற, தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல வாழ்வு சங்கமும், யுனிவர்சல் மெஷின் அமைப்பும் இணைந்து நடத்திய, முப்பெரும் விழாவில் தமிழ்நாடு உதவிக்கரம் மாத இதழ் மற்றும் இணையதள தொலைக்காட்சியின் தலைமை நிருபர் டாக்டர்.டி.டென்னிசன் அவர்களுக்கு, சிறந்த வாழ்நாள் சாதனையாளர் விருதினை, சென்னை மாவட்ட கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளர் ஸ்ரீகாந்த் அவர்கள் வழங்கி கௌரவித்தார்.
Feb 171 min read


சென்னை வர்த்தக மையக் கண்காட்சியில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தீர்வுகளை லூமினஸ் வெளிப்படுத்தியது.
மாசி 04. பிப்ரவரி - 16. நேரம் - 01.30 காலை. சென்னை வர்த்தக மையக் கண்காட்சியில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தீர்வுகளை லூமினஸ் வெளிப்படுத்தியது. சென்னை, பிப்ரவரி 12, 13,14, தேதிகளில், சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள, சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் கண்காட்சியில் லூமினஸ் சோலார் பங்கேற்று, தமிழ்நாட்டில் தூய்மையான ஆற்றல் பயன்பாட்டை விரைவுபடுத்தும், நோக்கில் தனது சமீபத்திய சோலார் மற்றும் எரிசக்தி சேமிப்பு தீர்வுகளை அறிமுகப்படுத்தியது. லூமினஸ் அரங்கத்த
Feb 161 min read
bottom of page
