ஸ்ரீ ஆதி சிவசக்தி ருத்ர சித்தர் வழிபாட்டு மன்றம் புதுக்கோட்டை மாவட்டம் அணவயல் கிராமத்தில் துவக்கம்.
- makkal viruppam
- Nov 2, 2023
- 1 min read

தஞ்சாவூர் மாவட்டம் - பட்டுக்கோட்டை அருகே உள்ள கார்காவாயல் கிராமத்தில்
ஸ்ரீஆதி சிவசக்தி ருத்ர சித்தர் என்பவர் அவரை தேடி வரும் பக்தர்கள் அனைவருக்கும் ஏற்படும் பிரச்சனைகளை தீர்த்து நலமுடன் வாழ வைத்து வருகிறார்,
ஆதலால் அந்த சித்தர் பீடத்தில் அதிகப்படியான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்,

மேலும் ருத்ர சித்தர் அவர்களுக்கு சிங்கப்பூர், மலேசியா, இந்தியாவில் பெங்களூர் மற்றும் தமிழகத்தில் பல மாவட்டங்களிலும்

ஸ்ரீஆதி சிவசக்தி ருத்ர சித்தர் வழிபாட்டு மன்றம் துவக்கப்பட்டு பொதுமக்களுக்கு பல்வேறு நன்மைகள் செய்து வருகின்றனர்,

29/10/2023 அன்று புதுக்கோட்டை மாவட்டம் - ஆலங்குடி தாலுகா அணவயல் கிராமத்தில் இளங்கோ - சரஸ்வதி தம்பதியினர் ஏற்பாட்டில்

ஸ்ரீஆதி சிவசக்தி ருத்ர சித்தர் வழிபாட்டு மன்றம் துவக்கப்பட்டது நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்,

அனைவரையும் ருத்ர சித்தர் அவர்கள் அவர்களைப் பற்றி அவர்களிடமே கூறி ஆசீர்வதித்தார்,

மேலும் நிகழ்வில் தஞ்சாவூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் உமா,

தஞ்சாவூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ராஜகுமாரி, புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் உஷா குமரேசன், வடகாடு பிரேமா,

சிவகங்கை மாவட்ட பொறுப்பாளர் பைரவர் சுப.செல்வ செல்வகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.










Comments