உலகக் கோப்பை கிரிக்கெட் பாகிஸ்தானை வென்ற இந்திய அணி பாராட்டிய தமிழிசை சௌந்தர்ராஜன். அகம
- makkal viruppam
- Oct 16, 2023
- 1 min read

அகமதாபாத்தில் நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நம் பாரத அணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்,

86 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்த இந்திய அணியின் கேப்டன் திரு.ரோஹித் சர்மா அவர்களுக்கும்,53 ரன்கள் எடுத்த திரு.ஸ்ரேயாஸ் ஐயர் அவர்களுக்கும்,பாகிஸ்தான் அணியின் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்திய இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
60 ஆண்டுகால வரலாற்றில் ஆசிய விளையாட்டு போட்டிகளில் 107 பதக்கங்களை வென்று சாதனை படைத்து
சர்வதேச அளவில்
விளையாட்டுத்துறையில் வெற்றிக்கு மேல் வெற்றியை குவித்து வரும் இந்திய அணி,

மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் 9- வருடகால ஆட்சி போன்று வருங்காலங்களிலும் விளையாட்டு போட்டிகளில் சாதனை படைக்க என் மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் - தமிழிசை செளந்தரராஜன் துணைநிலை ஆளுநர்










Comments