மணிப்பூரில் நடைபெறும் கலவரத்தை தடுத்து நிறுத்த கோரி கிறிஸ்தவ மக்கள் இயக்கம் போராட்டம்.
- makkal viruppam
- Jul 25, 2023
- 1 min read

சென்னை - மணிப்பூரில் நடைபெற்று வரும் கொலை மற்றும் பாலியல் கொடுமைகளுக்கு எதிராக கிறிஸ்தவ மக்கள் இயக்கம் சார்பாக சென்னை ஓட்டேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் 24/07/2023 அன்று நடைபெற்றது.

கிறிஸ்தவ மக்கள் இயக்கம் மற்றும் நீதியின் பாதை பத்திரிகை ஆசிரியர் ரஞ்சன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், நிர்வாகிகள் பிரான்சிஸ் பிரபாகரன், அபுபக்கர், டேவிட் செல்லதுரை, அந்தோணி ஜேம்ஸ், ரவிச்சந்திரன், ஜேம்ஸ் ராயன், சுகுமார், மோகன்ராஜ், சுரேஷ், அப்பொல்லோ, ஆறுமுகம், பிரகாஷ், பிரான்சிஸ், ராஜன், வில்சன், கொர்நெலியோ, சந்தானம், புஷ்பராஜ், பிரவீன், வெங்கடேஷ், ராஜி, ஏசுகிருபா, ஜெயராஜ், மாணிக்கம் உள்ளிட்ட நிர்வாகிகள்

மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு, மணிப்பூரில் வன்முறையை நிறுத்தவும், பெண்களை பாதுகாக்கவும்,

குற்றச்செயலில் ஈடுபட்டவர்களுக்கு உடனடி தண்டனை வழங்கவும் கோஷங்கள் எழுப்பினார்கள்.










Comments