பத்திரிகை துறையில் 25 வருடங்களாக சேவையாற்றும் மனசொலி பத்திரிகை ஆசிரியர் கா.குரு அவர்கள்.
- makkal viruppam
- Sep 9, 2023
- 1 min read

மனசொலி தினசரி மாலை பத்திரிகை, மக்கள் உறவு மாத பத்திரிகை ஆசிரியரும்,
தமிழ்நாடு சிறு பத்திரிகையாளர்கள் சங்க மாநில தலைவரும், தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர்,
எங்களது பாசத்திற்குரிய அண்ணனுமான
திரு.கா.குரு அண்ணன் அவர்கள்
நமது பத்திரிகை துறையில் கடந்த 25 வருடங்களாக அனைவரிடமும் அன்பாக மிகவும் பாசமாக சேவையாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது,

கடந்த வாரத்தில் சென்னை - சைதாப்பேட்டையில் ஒரு பத்திரிகையாளர் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டார் தகவல் அறிந்த உடனே செயலில் இறங்கி அந்த பத்திரிகையாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்து,

காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து குற்றவாளிகளை சிறையில் அடைக்க ஆவண செய்து வருகிறார்,

இந்த நிகழ்வு அனைத்து பத்திரிகையாளர்கள் மத்தியிலும் பெரிதும் மகிழக்கூடிய சம்பவமாக திகழ்ந்து வருகிறது,
இதுபோல அண்ணன் அவர்கள் இன்னும் பல நூறு ஆண்டுகள் பத்திரிகை துறையில் சேவையாற்ற மக்கள் விருப்பம் பத்திரிகை மற்றும்

ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நலச் சங்கம் - தமிழ்நாடு,
சார்பில் நிர்வாகிகள் அனைவரும் இறைவனை வேண்டுகிறோம்.










Comments